O/L பரீட்சை எழுதிய சுனாமி பேபி (Tsunami Baby)...


இன்று (1) ஆரம்பமான க.பொ.த. (சா. தர) பரீட்சையில், உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி (Tsunami Baby) எனப்படும் சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாசும் பரீட்சைக்கு தோற்றினார். 
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 
குருக்கள் மடத்தில் தற்போது வசித்து வரும் சுனாமி பேபி அபிலாஸ், செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் பரீட்சை எழுதினார். 
சுனாமி அனர்த்ததின் போது கண்டெடுக்கப்பட்ட அபிலாசிற்கு பலர் உரிமை கொண்டாடிய சந்தர்ப்பத்தில் பலத்த சிரமங்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனைக்கும் மத்தியில் உண்மையான பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்நிகழ்வு அப்போது முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
O/L பரீட்சை எழுதிய சுனாமி பேபி (Tsunami Baby)... O/L பரீட்சை எழுதிய சுனாமி பேபி (Tsunami Baby)... Reviewed by irumbuthirai on March 01, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.