பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோர்க்கு எரிபொருளில் முன்னுரிமை!


க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (17) முதல் இடம்பெறுகின்றன. 

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் போது பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் மதிப்பீட்டின் போது ஏற்படக்கூடிய போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு நேற்றைய தினம்  கலந்துரையாடலில் ஈடுபட்டது. அந்தக் கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோர்க்கு எரிபொருளில் முன்னுரிமை! பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோர்க்கு எரிபொருளில் முன்னுரிமை! Reviewed by Irumbu Thirai News on June 17, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.