அடுத்த இரு வாரங்கள் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் Online முறையில்....


தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து பிரச்சினைக்கு மத்தியில் அரச சேவை மற்றும் பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் இன்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. 
 
இதில் ஜனாதிபதியின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  
 
இதன்போது அடுத்த இரு வாரங்களுக்கு அரச சேவை மற்றும் பாடசாலை என்பவற்றின் நடவடிக்கைகளை 

Online முறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அந்த வகையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பான இரண்டு சுற்றறிக்கைகளை பொது நிர்வாக அமைச்சும் கல்வி அமைச்சும் வெளியிட்டுள்ளன.
அடுத்த இரு வாரங்கள் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் Online முறையில்.... அடுத்த இரு வாரங்கள் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் Online முறையில்.... Reviewed by Irumbu Thirai News on June 17, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.