நாளை நடைபெறவுள்ள வெளிநாட்டு சேவை போட்டிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்!


நாளை நடைபெறவுள்ள வெளிநாட்டு சேவையின் மூன்றாம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை திட்டமிட்டபடி உரிய நேரத்திற்கு நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக பரீட்சைக்கு தாமதமாக வருபவர்களுக்கும் பரீட்சை எழுதுவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார். 

நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த பரீட்சை 60 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலையில் வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் அதிகமாக காணப்படுவதாகவும் எனவே பரீட்சையை தாமதமாக்காமல் விரைவாக நடத்த வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது எனவே திட்டமிட்டபடி உரிய தினத்தில் பரீட்சை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

நாளை நடைபெறவுள்ள வெளிநாட்டு சேவை போட்டிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! நாளை நடைபெறவுள்ள வெளிநாட்டு சேவை போட்டிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on June 18, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.