வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லாத தேர்தல்...

August 04, 2020


தற்போது வெளிநாட்டுக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டிருப்பதனால் இம்முறை பொதுத் தேர்தலில் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்குபற்ற மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் தேர்தல் தொடர்பான மதிப்பீடுகளில் ஈடுபடுவார்கள் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண கெட்டியாராச்சி தெரிவித்தார்.

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லாத தேர்தல்... வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லாத தேர்தல்... Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

கொழும்பில் மற்றுமொரு போர்ட் சிட்டி (Port City)..

August 04, 2020


கொழும்பில் துறைமுக நகருக்கு அருகாமையில் மற்றுமொரு துறைமுக நகர் அமைக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் பந்துவிக்கிரம தெரிவித்துள்ளார். 
 கடலை நிரப்பி அமைக்கப்பட உள்ள இந்தத் துறைமுக நகரின் வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதனால் கொழும்பு நகருக்கு புதிய நிலப் பிரதேசம் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


நிவ்ஸ்வய
கொழும்பில் மற்றுமொரு போர்ட் சிட்டி (Port City).. கொழும்பில் மற்றுமொரு போர்ட் சிட்டி (Port City).. Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கடத்தல்கார பூனை!

August 04, 2020


வெலிக்கடை சிறையில் இருந்து தப்பிய போதைப்பொருள் கடத்தல்கார பூனை சிறைச்சாலை சுற்று வட்டாரத்திலேயே நடமாடித் திரிவதை கண்டறிந்துள்ளதாக சிறைச்சாலை நிர்வாக உத்தியோகத்தர் சந்தன ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த பூனை சுமார் 2 கிராம் ஹெரோயின் மற்றும் இரண்டு சிம் அட்டைகள் மற்றும் ஒரு மெமரி கார்ட் என்பன கழுத்தில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
பின்னர் இந்த பூனை போலீசுக்கு கையளிக்கப்படும் வரை சிறைச்சாலையில் உள்ள அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே  அந்த அறையிலிருந்து நேற்றுமுன்தினம் தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கடத்தல்கார பூனை! மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கடத்தல்கார பூனை! Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது!

August 04, 2020


நாளை இடம்பெறும் பொதுத்தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறும் அதேவேளை பி.ப. 4 மணி முதல் பி.ப. 5 மணி வரையான நேரம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க அவர்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சுகமடைந்து 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே அவர்களுடைய வாகனங்களில் வருகை தந்து இந்த நேரத்திற்குள் வாக்களிக்கலாம் என தெரிவித்தார். 
 இதேவேளை மேற்படி சந்தர்ப்பங்களில் மாத்திரம் சுகாதார அதிகாரி ஒருவர் உதவி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வாக்காளர்களுக்கு விசேட வாக்களிப்பு இடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை சுய தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 
தற்போதுள்ள நிலைமையில் இவ்வாறு வாக்களிக்க முடியாதவர்களாக லங்காபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 880 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது! தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது! Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

ஒரு வாக்காளர் அட்டை ரூ..5000: இருவர் கைது:

August 04, 2020


வாக்காளர் அட்டைகளை தலா 5,000 ரூபாய் கொடுத்து வாங்கிய இருவர் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவர்கள் வந்த காரை போலீசார் கைப்பற்றியதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு வாக்காளர் அட்டை ரூ..5000: இருவர் கைது: ஒரு வாக்காளர் அட்டை ரூ..5000: இருவர் கைது: Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

இம்முறை 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்...

August 04, 2020


2020 பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அடுத்த நாள் அதாவது 6 ஆம் திகதி இடம்பெற இருக்கிறது. அதேவேளை 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் இம்முறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்... இம்முறை 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்... Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

மூன்று வாக்களர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம்

August 04, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை மட்டக்களப்பு வாவியின் நடுவே மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு மேற்காக அமைந்துள்ள தீவாகும். இது பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டதொழுநோய் வைத்திய சாலை. தொழுநோய் வைத்தியசாலையில் சுமார் 200பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது அங்கு வேலைசெய்யும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் வணக்க தலங்கள் என பலவசதிகளும் இருந்துள்ளது. 
இந்நிலையில் மாந்தீவில் 2009ம் ஆண்டு பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்ப்பட்டுள்ளது அப்போது 13 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர் அங்கு தீ அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலை சரியான பராமரிப்பு இன்றி மூன்று பேர்தவிர அனைவரும் சென்றுவிட்டதாகவும் அதில் தற்போதுள்ளவர்களின் வாக்குகள் மட்டக்களப்பு தேர்தல் தொகுயில் பதியப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. இவர்களுக்கான வாக்குப் பெட்டி இயந்திரப்படகு மூலம் மாந்தீவு வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி கலாமதி பத்மராஜாதெரிவிதார்.
அ.த.தி.
மூன்று வாக்களர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம் மூன்று வாக்களர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம் Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

Advanced Certificate Programme in Entrepreneurship and Small Business Management (ESBM)

August 03, 2020

The Open University of Sri Lanka presents this programme to address these two crucial factors of business success, selection, and management of small business ventures.
Click the link below for more details:


ESBM Course
Advanced Certificate Programme in Entrepreneurship and Small Business Management (ESBM) Advanced Certificate Programme in Entrepreneurship and Small Business Management (ESBM) Reviewed by irumbuthirai on August 03, 2020 Rating: 5

The Open University of Sri Lanka: Plant Breeding Techniques (Short Course)

August 03, 2020

The short course in plant breeding techniques has designed to help the participants to get the comprehensive knowledge with hands on experience on plant breeding techniques related to crop and ornamental plants.This Short course in Plant Breeding Techniques includes two parts; Theory and laboratory Sessions. Theoretical knowledge is provided through 24 hours gust lectures and audio visual aids. The practical skills are developed through 15 hours of Laboratory sessions and three Field visits to CRI, Lunuwila, HORDI, Gannoruwa and CIC, Hingurakkgoda. 
Issuing of Applications from: 15th January 2020 to 15th August 2020 (Limited to 30 students (First-come, first-served basis)) 
Click the link below for more details:
00000
The Open University of Sri Lanka: Plant Breeding Techniques (Short Course) The Open University of Sri Lanka: Plant Breeding Techniques (Short Course) Reviewed by irumbuthirai on August 03, 2020 Rating: 5

புதிய வடிவில் கல்வியமைச்சின் இணையத்தளம்..

August 03, 2020

புதிய வடிவில் கல்வியமைச்சின் இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.  
அமைச்சு. மாணவர்கள், கல்வியாளர்கள் என 03 பிரிவுகளைக் கொண்டதாய் மும்மொழிகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
புதிய வடிவில் கல்வியமைச்சின் இணையத்தளம்.. புதிய வடிவில் கல்வியமைச்சின் இணையத்தளம்.. Reviewed by irumbuthirai on August 03, 2020 Rating: 5

31-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

August 02, 2020

31-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 

புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர்-111 ஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப் பரீட்சை, 
கிராம அலுவலர் சேவையின் II ஆம் வகுப்பின் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை, 
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம III இற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை. 
தொடர்பில் பல முக்கிய அறிவித்தல்கள் அடங்கியுள்ளன. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

31-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 31-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on August 02, 2020 Rating: 5

24-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

August 02, 2020

24-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
பல முக்கிய அறிவித்தல்கள் அடங்கிய இந்த வர்த்தமானி அறிவித்தலை மும்மொழிகளிலும் தருகிறோம். 
தமிழ் மொழியில் முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
24-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 24-07-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on August 02, 2020 Rating: 5

மூடப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்

August 02, 2020


இம்முறை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக, நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களம் பயன்படுத்தப்படவுள்ளது. 
எனவே நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களகளம் எதிர்வரும் 04ஆம், 05ஆம் திகதிகளில், வழமையான சேவைகளுக்காக திறக்கப்படமாட்டாது. 
இதுதொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:


மூடப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மூடப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் Reviewed by irumbuthirai on August 02, 2020 Rating: 5
Powered by Blogger.