சகல வசதிகளுடனும் 1000 தேசிய பாடசாலைகள்: முதல் பாடசாலை 200 வருட பழமையானது:
irumbuthirai
December 31, 2020
மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்கும் விடயத்தில் கணினி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மொழிக் கல்வி உள்ளிட்ட வசதிகள் விருத்தி செய்யப்பட வேண்டும். நாட்டில் அமைக்கப்படும் புதிய தேசிய பாடசாலைகள் இந்த சகல வசதிகளையும் வழங்கும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
 நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் நேற்று (30) 
கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
இந்த வேலைத்திட்டத்தின் முதல் பாடசாலையாக சுமார் 200 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்த கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இந்த செயற்றிட்டம் பல கட்டங்களாக  முன்னெடுக்கப்படும். 1ம் கட்டத்தில் 123 பாடசாலைகளும், 2ம் கட்டத்தில் 673 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சகல வசதிகளுடனும் 1000 தேசிய பாடசாலைகள்: முதல் பாடசாலை 200 வருட பழமையானது:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
December 31, 2020
 
        Rating: 
 
        Reviewed by irumbuthirai
        on 
        
December 31, 2020
 
        Rating: 



















