சிறையிலிருக்கும் பிள்ளையானுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பதவி


சிறையிலிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களால் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கடந்த பொதுத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்தார். 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிள்ளையான் சிறையில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறையிலிருக்கும் பிள்ளையானுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பதவி சிறையிலிருக்கும் பிள்ளையானுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பதவி Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.