டெங்கு நோய் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை: கொழும்பு, கண்டியின் நிலை:


டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. தற்பொழுது பெய்துவரும் மழையின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 17 நாட்களில் நாட்டில் 506 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். 
இவர்களுள் பெரும் எண்ணிக்கையிலானோர் கண்டி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். 
தமது வீடுகளுக்கு அருகாமையிலும் பாடசாலை உள்ளிட்ட சுற்றாடல் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பரவாதவகையில் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று தொற்றுநோய் விசேட வைத்தியர்கள் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
(அ.த.தி)
டெங்கு நோய் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை: கொழும்பு, கண்டியின் நிலை: டெங்கு நோய் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை: கொழும்பு, கண்டியின் நிலை: Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.