20ஐ தோற்கடிக்க SLFP ஐ சந்தித்த SJB

September 29, 2020

 


20ஆவது திருத்தத்தை தோற்கடிக்கும் முகமாக அதற்கெதிராக வாக்களிக்கும்படி கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இரண்டு மூன்று தடவைகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் தலைவரை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
இதன்போது 20ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரான அம்சங்களை கொண்டு இருப்பதாகவும் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் இவர்களால் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த உயர் தலைவர் எல்லாவற்றையும் அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்ததாகவும் இது தொடர்பில் எந்த ஒரு நிலைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 
இதற்கிடையில் 20வது திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழு ஒன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
20ஐ தோற்கடிக்க SLFP ஐ சந்தித்த SJB 20ஐ தோற்கடிக்க SLFP ஐ சந்தித்த SJB Reviewed by irumbuthirai on September 29, 2020 Rating: 5

External Degree: Sri Jayawardenepura University (B.Sc Business Studies)

September 29, 2020

External Degree in the Sri Jayawardenepura University (B.Sc Business Studies) 
Closing date: 02-11-2020. 
See the details below.


External Degree: Sri Jayawardenepura University (B.Sc Business Studies) External Degree: Sri Jayawardenepura University (B.Sc Business Studies) Reviewed by irumbuthirai on September 29, 2020 Rating: 5

நரிகளின் பிரச்சினைக்கு அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

September 28, 2020

 


களுத்துறை மாவட்டத்தில் பல பகுதிகளில் அண்மையில் நரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சீ.பி. ரத்நாயக அவர்கள் அப்பகுதிகளில் வனவிலங்கு அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். 
இதன் முதற்கட்டமாக மில்லெனிய பிரதேச செயலகத்தின், முவப்படிய கிராமத்திற்கு 02 வனவிலங்கு அதிகாரிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நரிகளின் பிரச்சினைக்கு அமைச்சரின் அதிரடி நடவடிக்கை நரிகளின் பிரச்சினைக்கு அமைச்சரின் அதிரடி நடவடிக்கை Reviewed by irumbuthirai on September 28, 2020 Rating: 5

மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள்

September 27, 2020

 


2017 இல் இங்கிலாந்தில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்ட கழிவுகள் அடங்கிய 263 கொள்கலன்களில் 21 கொள்கலன்கள் மீண்டும் நேற்றைய தினம் இங்கிலாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. 
சர்வதேச விதிமுறைகள் நிபந்தனைகளை மீறி அனுப்பப்பட்ட இந்த கொள்கலன்களில் பெரும்பாலும் வைத்தியசாலைக் கழிவுகள் இருந்தமை கண்டறியப்பட்டது. இதனால் இங்கு சர்ச்சைகளும் ஏற்பட்டன. 
இந்த 263 கொள்கலன்களில் 242 கொள்கலன்கள் தொடர்பில் தற்போது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 21 நேற்றையதினம் அனுப்பப்பட்டுள்ளது. 
குறித்த கொள்கலன்களை மீண்டும் பொறுப்பேற்க இங்கிலாந்து சம்மதம் தெரிவித்துள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.
மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட கழிவுகள் அடங்கிய  21 கொள்கலன்கள் Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

தேங்காய் அளக்கும் கருவிகளுடன் நாடு பூராகவும் அதிகாரிகள் களத்தில்

September 27, 2020

விஷேட கருவிகளைக் கொண்டு தேங்காய்களை அளக்கும் செயற்பாட்டை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் நாடுபூராகவும் மேற்கொண்டு வருவதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 
இது தொடர்பான முன்னெடுப்புகளை மாவட்ட ரீதியாக மேற்கொள்ளும்படி அதிகார சபையின் தலைவர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் டி.எம்.எஸ். திசாநாயக்க தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இது தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தலில் 13 அங்குலத்தை விட கூடிய தேங்காய்கள் ரூ.70 ற்கும் 12 - 13 வரை அங்குலம் கொண்ட தேங்காய்கள் 65 ரூபாய்க்கும் 12 அங்குலத்தை விட குறைந்த தேங்காய்கள் 60 ரூபாய்க்கும் விற்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேங்காய் அளக்கும் கருவிகளுடன் நாடு பூராகவும் அதிகாரிகள் களத்தில் தேங்காய் அளக்கும் கருவிகளுடன் நாடு பூராகவும் அதிகாரிகள் களத்தில் Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

சஜித்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அசாத் சாலி

September 27, 2020

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார். 
ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் தேசியப் பட்டியலில் தனக்கு ஒன்றை வழங்குவதாக சொன்ன ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. எனவே ஒப்பந்தத்தை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விருப்பதாக அசாத் சாலி மேலும் தெரிவித்தார்.
சஜித்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அசாத் சாலி சஜித்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அசாத் சாலி Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

திருகோணமலை: கப்பலில் இருந்த 17 பேருக்கு கொரோனா

September 27, 2020

இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு இந்தியாவிலிருந்து பெட்ரோலியத்தை கொண்டுவந்து திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலிலிருந்த ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிரதேச சுகாதார வைத்திய அத்தியட்சகர் காரியாலயத்தில் தொற்று நோயியல் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் டிலோஜன் தெரிவித்துள்ளார். 
தற்போது கப்பலை நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்வதாகவும் அதுவரை கப்பலை கடற்படையினர் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை: கப்பலில் இருந்த 17 பேருக்கு கொரோனா திருகோணமலை: கப்பலில் இருந்த 17 பேருக்கு கொரோனா   Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே

September 27, 2020

எதிர்வரும் 3 வருடங்களுக்குள் பால்மா உற்பத்தியில் தன்னிறைவு கண்டு வெளிநாடுகளிலிருந்து பால்மா இறக்குமதி செய்யப்படுவது முற்றாக நிறுத்தப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 
2021 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நாவலப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
எங்களது நாட்டில் சுமார் இரண்டரை இலட்சம் பால் தரும் மாடுகள் காணப்படுகின்றன. மொத்த பால் தேவையில் 35 வீதமானவை 
மாத்திரமே எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏனைய அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. நியூசிலாந்தில் இருந்து அதிகமாக பால்மாக்களை இறக்குமதி செய்யும் நாடு இலங்கைதான். 
ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பு பால் உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடு ஆகும். எனவே அந்த அடிப்படையில் அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

Corona Positive: மூடப்பட்டது ICC தலைமையகம்

September 27, 2020

 


துபாயில் அமைந்துள்ள ICC தலைமையகத்தில் கடமை புரியும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த தலைமையகம் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
ICC ஊழியர்கள் மற்றும் அவர்களின் நெருக்கமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதேவேளை இந்நிகழ்வு ஐபிஎல் போட்டிகளுக்கு பாதகமாக அமையாது என சிரேஷ்ட அதிகாரியை மேற்கோள்காட்டி இந்தியாவின் ANI செய்தி வெளியிட்டுள்ளது.
Corona Positive: மூடப்பட்டது ICC தலைமையகம் Corona Positive: மூடப்பட்டது ICC தலைமையகம் Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

விரைவில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள்: முழு விபரம் இதோ

September 27, 2020

வீதி சட்டங்களை மீறும் சாரதிகளுக்கான விசேட புள்ளி முறையை அமல்படுத்த எதிர்பார்த்திருப்பதாக வீதி பாதுகாப்பு சம்பந்தமான சிரேஷ்ட பொலீஸ் அதிகாரி இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். 
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வொரு குற்றங்களின் போதும் புள்ளிகள் குறைக்கப்பட்டு முழுமையாக புள்ளிகள் குறைக்கப்பட்டதும் ஒரு வருடத்திற்கு சாரதி அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படும். மீண்டும் தகுதிகான் பரிசோதனைகளின் பின்னரே சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 
அதேவேளை 82 லட்சம் வாகனங்கள் பாவனையில் உள்ள நாட்டில் அதற்கேற்ப வீதி ஒழுங்கமைப்பு அபிவிருத்தி செய்யப்படவில்லை. கொழும்பிற்கு மாத்திரம் நாளாந்தம் 05 மார்க்கங்கள் மூலமாக சுமார் ஐந்து லட்சம் வாகனங்கள் வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விரைவில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள்: முழு விபரம் இதோ விரைவில் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு 24 புள்ளிகள்: முழு விபரம் இதோ Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

Courses in the Government Universities

September 27, 2020

Courses in the Government Universities. 
Master Degree, 
External Degree, 
Diploma, 
Postgraduate Diploma, 
Advanced Certificate Courses. 
See the details below:






Courses in the Government Universities Courses in the Government Universities Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

Courses @ NIBM Digital Campus

September 27, 2020

Online courses at the National Institute of Business Management (NIBM). 
See the details below:

Courses @ NIBM Digital Campus Courses @ NIBM Digital Campus Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

NAITA: Application for Evaluators

September 27, 2020

National Apprentice Industrial Training Authority (NAITA) 
Application for Evaluators. 
Closing date: 07-10-2020. 
See the details below:


NAITA: Application for Evaluators NAITA: Application for Evaluators Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5
Powered by Blogger.