திருகோணமலை: கப்பலில் இருந்த 17 பேருக்கு கொரோனா


இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு இந்தியாவிலிருந்து பெட்ரோலியத்தை கொண்டுவந்து திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலிலிருந்த ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிரதேச சுகாதார வைத்திய அத்தியட்சகர் காரியாலயத்தில் தொற்று நோயியல் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் டிலோஜன் தெரிவித்துள்ளார். 
தற்போது கப்பலை நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்வதாகவும் அதுவரை கப்பலை கடற்படையினர் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை: கப்பலில் இருந்த 17 பேருக்கு கொரோனா திருகோணமலை: கப்பலில் இருந்த 17 பேருக்கு கொரோனா   Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.