கண்டி, பூவேலிகடை கட்டிட உரிமையாளருக்கு விளக்கமறியல்


கடந்த 20ஆம் திகதி அதிகாலை கண்டி, பூவெலிக்கடை பகுதியில் உடைந்து விழுந்த ஐந்து மாடி கட்டிடத்தின் உரிமையாளரை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 
இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானமை குறிப்பிடத்தக்கது. 
மேற்படி உரிமையாளர் இன்று காலை கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
அனுர லேவ்கே என்ற பெயருடைய மேற்படி உரிமையாளர் விகாரை ஒன்றின் முன்னாள் தியவதனே நிலமே பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(நிவ்ஸ்வய)
கண்டி, பூவேலிகடை கட்டிட உரிமையாளருக்கு விளக்கமறியல் கண்டி, பூவேலிகடை கட்டிட உரிமையாளருக்கு விளக்கமறியல் Reviewed by irumbuthirai on September 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.