றிஷாத் பதியுதீனின் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரம் இல்லை - பொலிஸ்


ஏப்ரல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு போதிய சாட்சியங்கள் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சேனாரத்ன தெரிவித்துள்ளார். 
நேற்று (02) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 
ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த ஊடகப்பேச்சாளர் அவரின் விடுதலை எந்தவித அரசியல் 
பின்னணியும் கொண்டது அல்ல என தெரிவித்தார். 
மேலும் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இன்னும் சில வாரங்களில் முழுமையாக நிறைவடையும். இது தொடர்பில் இதுவரை சந்தேகத்தின் பேரில் சுமார் 100 பேரை தடுத்து விசாரணை செய்து கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார். 
ரிப்கான் பதியுதீன் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
றிஷாத் பதியுதீனின் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரம் இல்லை - பொலிஸ் றிஷாத் பதியுதீனின் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரம் இல்லை - பொலிஸ்  Reviewed by irumbuthirai on October 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.