மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள்

 


2017 இல் இங்கிலாந்தில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்ட கழிவுகள் அடங்கிய 263 கொள்கலன்களில் 21 கொள்கலன்கள் மீண்டும் நேற்றைய தினம் இங்கிலாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன. 
சர்வதேச விதிமுறைகள் நிபந்தனைகளை மீறி அனுப்பப்பட்ட இந்த கொள்கலன்களில் பெரும்பாலும் வைத்தியசாலைக் கழிவுகள் இருந்தமை கண்டறியப்பட்டது. இதனால் இங்கு சர்ச்சைகளும் ஏற்பட்டன. 
இந்த 263 கொள்கலன்களில் 242 கொள்கலன்கள் தொடர்பில் தற்போது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 21 நேற்றையதினம் அனுப்பப்பட்டுள்ளது. 
குறித்த கொள்கலன்களை மீண்டும் பொறுப்பேற்க இங்கிலாந்து சம்மதம் தெரிவித்துள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.
மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட கழிவுகள் அடங்கிய  21 கொள்கலன்கள் Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.