தேங்காய் அளக்கும் கருவிகளுடன் நாடு பூராகவும் அதிகாரிகள் களத்தில்


விஷேட கருவிகளைக் கொண்டு தேங்காய்களை அளக்கும் செயற்பாட்டை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் நாடுபூராகவும் மேற்கொண்டு வருவதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 
இது தொடர்பான முன்னெடுப்புகளை மாவட்ட ரீதியாக மேற்கொள்ளும்படி அதிகார சபையின் தலைவர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் டி.எம்.எஸ். திசாநாயக்க தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இது தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தலில் 13 அங்குலத்தை விட கூடிய தேங்காய்கள் ரூ.70 ற்கும் 12 - 13 வரை அங்குலம் கொண்ட தேங்காய்கள் 65 ரூபாய்க்கும் 12 அங்குலத்தை விட குறைந்த தேங்காய்கள் 60 ரூபாய்க்கும் விற்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேங்காய் அளக்கும் கருவிகளுடன் நாடு பூராகவும் அதிகாரிகள் களத்தில் தேங்காய் அளக்கும் கருவிகளுடன் நாடு பூராகவும் அதிகாரிகள் களத்தில் Reviewed by irumbuthirai on September 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.