சஜித்தின் கூட்டத்திற்கு கல்வீச்சு: நீதிமன்றம் விடுத்த உத்தரவு:


எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்ட மக்கள் சந்திப்பில் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
நேற்றிரவு (29) ரத்மலானையில் இடம்பெற்ற குறித்த மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது மேடையை நோக்கி இவ்வாறு கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 
தான் எந்த வித சவால்களுக்கும் முகங்கொடுக்க தயார் எனவும், எவருக்கும் அச்சமடையப் போவதில்லை எனவும் இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர், தெரிவித்தார்.
சஜித்தின் கூட்டத்திற்கு கல்வீச்சு: நீதிமன்றம் விடுத்த உத்தரவு: சஜித்தின் கூட்டத்திற்கு கல்வீச்சு: நீதிமன்றம் விடுத்த உத்தரவு: Reviewed by irumbuthirai on September 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.