National Fuel Pass Registration/ தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான விண்ணப்பம்
Reviewed by Irumbu Thirai News
on
July 16, 2022
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
July 16, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
July 16, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
July 16, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
July 15, 2022
Rating: 5
அந்த வகையில் எதிர்வரும் மாதம் (ஆகஸ்ட்) நடுப்பகுதி அளவில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பல்வேறு நெருக்கடி நிலைமைகளின் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இந்த வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும். அதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 18 முதல் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வரை அனுப்பலாம்.
இதேவேளை இந்த வருடத்திற்குரிய தரம் 05 புலமை பரிசில் பரீட்சை நவம்பர் 27ஆம் தேதி நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வருடத்திற்குரிய சாதாரண பரீட்சை அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறும்.
இந்த பரீட்சைகள் தீர்மானிக்கப்பட்டவை நாட்டின் நிலைமைகள் சுமுகமானது என்ற அடிப்படையில். நிலைமைகள் மாறினால் இந்த பரீட்சைக்கான திகதிகளையும் மாற்ற வேண்டி ஏற்படும்.
கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து பிள்ளைகளின் பரீட்சைகளை நடத்த பரீட்சை திணைக்களத்தால் முடிந்தது. அதே மாதிரி எதிர்வரும் காலங்களிலும் பிள்ளைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த பரீட்சைகள் நடாத்தப்படும்.
எவ்வாறாயினும் கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக சிக்கலடைந்த பரீட்சை நேரசூசி எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் உரிய முறைப்படி முன்னர் செய்யப்பட்ட விதத்திலேயே நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Reviewed by Irumbu Thirai News
on
July 15, 2022
Rating: 5
அந்த வகையில் இம்மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் கடந்த வார அறிவித்தலின் பிரகாரம் இம்மாதம் 18 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாக இருந்தன.
இன்று காலை இது தொடர்பில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர், தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர், மாகாண கல்வி செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சின் குறித்த அறிவித்தலைக் கீழே காணலாம்.
Reviewed by Irumbu Thirai News
on
July 15, 2022
Rating: 5
அவர் வெளியிட்ட அறிவிப்பை இங்கே தருகிறோம்.
கோதாபய ராஜபக்ஷ அவர்களின் பதவி விலகல் கடிதம் என்னிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2022-07-14ம் திகதியிலிருந்து ஜனாதிபதி அவர்கள் தனது பதவியிலிருந்து உத்தியோபூர்வமாக விலகி உள்ளார்.
இப்போதிலிருந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகிறது. இந்த நடவடிக்கை நிறைவு பெறும் வரை அரசியல் யாப்பின் அடிப்படையில் பிரதமர் அவர்கள் பதில் ஜனாதிபதியாக கடமையாற்றுவார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதானது, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் என்னால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது போல் 1981 ம் ஆண்டு 2ம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் கொண்ட சட்டம் மற்றும் அரசியல் யாப்பின் 40 ஆம் சரத்திற்கு அமைய இடம்பெறும். இந்த செயற்பாட்டை மிகவும் விரைவாகவும் வெற்றிகரமாகவும் நிறைவு செய்வது எனது நோக்கம்.
தெற்காசியாவின் மிகப் பழமை வாய்ந்த ஜனநாயக நாடு என்று பெருமைப்படும் நாம், இந்த விடயத்தை உயர்ந்த ஜனநாயக வரம்புக்குள் நிறைவேற்றுவது எமக்கு மட்டுமல்ல உலக அரசியல் வரலாற்றிலும் முக்கிய நிகழ்வாக இருக்கும்.
அந்த வகையில் இந்த ஜனநாயக செயற்பாட்டுக்கு உயர்ந்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு பிரதானிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுகிறேன்.
விசேடமாக எமது நாட்டின் கௌரவமான அன்பான பிரஜைகளிடம் நான் வேண்டிக் கொள்வது, உரிய ஜனநாயக முறைப்படி பாராளுமன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சுதந்திரமாகவும் தமது மனசாட்சி படியும் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் அவசியமான சுமுகமான நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறான சுமுகமான நிலைமையின் கீழ் 07 நாட்கள் என்ற மிகக் குறுகிய காலத்தினுள் இந்த செயற்பாட்டை நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட சகல தரப்பினரிடமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன்.
அந்த வகையில் 2022-07-16ம் திகதி சனிக்கிழமை பாராளுமன்ற கூட்டப்படும் எனவே சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகிறேன். இது தொடர்பாக நீங்கள் அனைவரும் வழங்கும் ஒத்துழைப்பிற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். என்று தனது அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்பு தொடர்பான வீடியோவை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Reviewed by Irumbu Thirai News
on
July 15, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
July 15, 2022
Rating: 5
குறித்த ஊடக அறிவித்தலை கீழே காணலாம்.
Reviewed by Irumbu Thirai News
on
July 14, 2022
Rating: 5
விமானங்களின் கண்காணிப்பு தொடர்பான தகவல்களை வழங்கும் இணையத்தளமான Flightradar24.com என்ற தளத்தின் தகவல்களின்படி மாலைதீவின் மாலேயிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட சவுதி அரேபியாவுக்கு சொந்தமான Saudia SV- 788 என்ற விமானம் 12,200 ற்கும் அதிகமான பேரால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் உலகின் கவனத்தையே திருப்பியுள்ளது என்பதற்கு இந்த விடயம் நல்ல சான்று என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை கோதாபய ராஜபக்ச சென்ற விமானம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 7.17 க்கு தரையிறங்கியுள்ளது.
இதேவேளை கோதாபயவின் வருகை தொடர்பில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,
கோட்டாபய தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூர் வருகை தந்துள்ளார். அவர் எவ்வித அரசியல் தஞ்சமோ புகழிடமோ கோரவில்லை. அவ்வாறு அரசியல் புகழிடம் சிங்கப்பூரால் பொதுவாக வழங்கப்படுவதும் இல்லை. அவர் சிங்கப்பூரில் எவ்வளவு காலம் தங்குவார் என தெரியவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Irumbu Thirai News
on
July 14, 2022
Rating: 5
இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான போலீஸ் அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து நாரஹேண்பிட்ட போலீஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் இதன் போது வெல்லவாய ராணுவ முகாமில் கடமையாற்றும் ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கியானது 60 தோட்டாக்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்களால் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்களின்படி, நேற்று பல்வேறு இடங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 79 ஆண்களும் 05 பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேலை சிங்கப்பூர் சென்றதும் ராஜினாமா கடிதத்தை அனுப்புவதாக கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக செய்திகள் வெளியானாலும் இன்னமும் அவர் மாலைதீவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கோத்தாபயவிற்கு பாதுகாப்பு வழங்கி அடைக்கலம் கொடுத்தமைக்கு மாலைதீவின் எதிர்க்கட்சி ஆளும் கட்சியை வன்மையாக கண்டித்துள்ளது.
மேலும் கோதாபையவை மாலை தீவில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறு கோரி மாலைதீவில் உள்ள இலங்கையர்கள் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இதன் போது இருவர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றைய தினம் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் செல்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மாலைதீவின் வேலானா சர்வதேச விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும் சிங்கப்பூர் செல்லும் இரு விமானங்களை நிராகரித்து அதில் செல்லாமல் அங்கேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையில் நாடு பூராகவும் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை ஐந்து மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு நிமிடமும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் நகருகிறது. சரியான முடிவுகள் எடுக்கப்பட்டு அமைதியான நிலைமை திரும்ப வேண்டும் என்பதே சகலரினதும் பிரார்த்தனையாகும்.
Reviewed by Irumbu Thirai News
on
July 14, 2022
Rating: 5
தான் வெளிநாட்டில் இருப்பதால் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாலும் எனவே வெளிநாட்டில் இருக்கும் காலம் வரை தனது கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமிக்கிறேன் என அந்த விஷேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாலைதீவிற்கு சென்ற கோத்தாபய ராஜபக்ஷ அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதாகவும் சிங்கப்பூரை சென்றடைந்ததும் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இன்றைய தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிக்கையில் இன்றைய தினத்திற்குள் ஜனாதிபதியின் ராஜினாமா கடிதம் கிடைக்காவிட்டால் தான் சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அந்தக் கூட்டத்திற்கு சமூகமளிக்க முன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின்போது அவர்களும் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகும் படி கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்தனர் ஆனால் ரணில் விக்ரமசிங்க வரவில்லை. தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்மித்துள்ளதாகவும் அவர்கள் பாராளுமன்றத்தை சுற்றி வளைத்துள்ளதாகவும் எனவே பாராளுமன்றத்திற்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டால் மீண்டும் பதில் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி தருமாறு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அந்தக் கோரிக்கை கட்சி தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இது மாத்திரமின்றி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபர் ஒருவரை பிரதமராக பெயரிடுமாறு தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் வகையிலேயே இவ்வாறு பிரதமர் ஒருவரை பெயரிடுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 9ம் தேதி கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளும் கட்சியை சேர்ந்தவரும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கருதப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். அதாவது ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும் என்பதே கடந்த 9ம் திகதி நடைபெற்ற கட்சி தலைவர்களின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும்.
இது மாத்திரமன்றி தற்போது புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் காணப்படும் பிரதமரின் காரியாலயம் உடனடியாக ஆர்ப்பாட்டக்காரர்களால் விடுவிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு தாம் எப்போதும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆனால் அரச அலுவலகங்களை கைப்பற்றி சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க உடனடியாக ராஜினாமா செய்து சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். மேலும் நாட்டின் நிர்வாகத்தை சபாநாயகருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும். கடந்த ஒன்பதாம் தேதி ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய செயல்பட வேண்டும் என அரசாங்கத்திலிருந்து அண்மையில் விலகி சுயாதீனமாக செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது.
இது மாத்திரமன்றி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கையில் தற்போதைய நெருக்கடியான நிலைமைக்கு பாராளுமன்றத்தால் தீர்வு காண முடியும். எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் பாராளுமன்றத்தையோ சபாநாயகரின் இல்லத்தையோ முற்றுகையிடுவதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சற்று நேரத்திற்கு முன் சபாநாயகரின் உத்தியோபூர்வ இல்லத்திற்கு அண்மையிலும் போராட்டக்காரர்கள் கூடியமையால் அங்கு கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டு கடும் பதற்ற நிலை தோன்றியது.
இதேவேளை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் போடப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு முழு நாட்டிற்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் இந்த ஊரடங்கு உத்தரவுக்கான அதிவிசேட வர்த்தமானி சற்று நேரத்திற்கு முன் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஒவ்வொரு நிமிடமும் கடும் பரபரப்புக்கு மத்தியிலும் போராட்டங்களுக்கு மத்தியிலும் கழிகின்றது. நல்ல முடிவுகள் எட்டப்பட்டு சுமூகமான நிலை உருவாக வேண்டும் என்பதே அனைவரினதும் பிரார்த்தனையாகும்.
Reviewed by Irumbu Thirai News
on
July 13, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
July 13, 2022
Rating: 5