525 ஆசிரியர் வெற்றிடங்கள்: விண்ணப்பித்தவர்கள் 260 பேர் மட்டுமே:


சப்ரகமுவ மாகாணத்திலுள்ள இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் 200 காணப்படுகின்றன. அவற்றில் சுமார் 525ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. ஆனால் அதற்காக 260பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர் என சப்ரகமுவ மாகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் ருக்மணி ஆரியரட்ன தெரிவித்துள்ளார். 
குருவிட்ட கீரைகலை தமிழ் வித்தியாலயத்தில் 63இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக்கட்டடத்தின் திறப்பு விழாவில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இந்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்க ஆசிரியர் உதவியாளர்களை 
நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
525 ஆசிரியர் வெற்றிடங்கள்: விண்ணப்பித்தவர்கள் 260 பேர் மட்டுமே: 525 ஆசிரியர் வெற்றிடங்கள்: விண்ணப்பித்தவர்கள் 260 பேர் மட்டுமே: Reviewed by irumbuthirai on April 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.