தீவிரமடையும் கொரோனா: பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் மேலும் இரு வாரங்கள் ஒத்திவைப்பு:


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து இன்று காலை தமக்கு கிடைக்கப் பெற்ற ஆலோசனைக்கமைய, பல்கலைக்கழகங்களை மீள திறப்பதை மேலும் 02 வாரங்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். 
இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பில் சகல பல்கலைக்கழக உப பீடாதிபதிகளுக்கும் இந்த அறிவித்தலை விடுப்பதோடு, 02 வாரங்களில் நிலைமைகளை அவதானித்ததன் பின்னர் சகல பல்கலைக்கழகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இம்மாதம் 27 ஆம் திகதி நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் கொரோனா: பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் மேலும் இரு வாரங்கள் ஒத்திவைப்பு: தீவிரமடையும் கொரோனா: பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் மேலும் இரு வாரங்கள் ஒத்திவைப்பு: Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.