கல்வி செயற்பாடுகள் தவிர ஏனையவற்றுக்கான தடை தொடரும்:



யாழ்ப்பாண மாவட்டத்திலே கல்வி செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய சகல விடயங்களுக்கும் விடுக்கப்பட்ட தற்காலிகத் தடை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.மகேசன் தெரிவித்தார். 
அந்தவகையில் அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் யாவும் சுகாதார தரப்பினரின் ஆலோசனையின் படி திங்கட்கிழமை (19) முதல் முழுமையாக செயற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.
கல்வி செயற்பாடுகள் தவிர ஏனையவற்றுக்கான தடை தொடரும்: கல்வி செயற்பாடுகள் தவிர ஏனையவற்றுக்கான தடை தொடரும்: Reviewed by irumbuthirai on April 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.