சகல சொத்துக்களும் பறிமுதல்: சரத் வீரசேகரவின் மற்றுமொரு அறிவிப்பு:


ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
இதுவரை 11 தீவிரவாத அமைப்புகளை முற்றிலுமாக தடை செய்துள்ளோம். அதன் தலைவர்களை அழைத்து வந்து விசாரணைகளை நடத்துகிறோம். அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்த விசாரணை அறிக்கைகளைப் பெற்றதும், அந்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்து, அவற்றை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும் அவற்றின் உறுப்பினர்கள் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்பினால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சகல சொத்துக்களும் பறிமுதல்: சரத் வீரசேகரவின் மற்றுமொரு அறிவிப்பு: சகல சொத்துக்களும் பறிமுதல்: சரத் வீரசேகரவின் மற்றுமொரு அறிவிப்பு: Reviewed by irumbuthirai on April 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.