ஆகஸ்ட் முதல் புதுவகையான கற்றல் முறை: வெளியானது அமைச்சரின் அறிவிப்பு:
irumbuthirai
June 11, 2021
இணைய வழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் அதே வழியில் திறனை வளர்த்துக் கொள்கிறார்களா என்ற பிரச்சினையின் காரணமாக வீட்டிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும்
புதிய கற்றல் முறையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (9) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த புதிய முறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் முதல் புதுவகையான கற்றல் முறை: வெளியானது அமைச்சரின் அறிவிப்பு:
Reviewed by irumbuthirai
on
June 11, 2021
Rating:
