28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

May 29, 2021

28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 28-05-2021 (In three languages) 
இதில், 
கிராம அலுவலர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சை,
சுகாதார அமைச்சிற்கான  பதவி வெற்றிடங்கள்,
தொழில் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை,
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்கான பதவி வெற்றிடங்கள் 
உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



கடந்த வார வர்த்தமானி:

Join our WhatsApp Groups:


Join Our Telegram Channel:

Like our FB Page:







28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி!

May 29, 2021

யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். 
இவர் யாழ்ப்பாணம், அரியாலை பகுதியைச் சேர்ந்தவர். இவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா 
தொற்று கண்டறியப்பட்ட நிலையில் , விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதியானது. 
அதனைதொடர்ந்து இவர் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (28) வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி! பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி! Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

பொரளை பிரதேச வீடொன்றில் தடுப்பூசி விற்பனை! விசாரணைகள் ஆரம்பம்!

May 29, 2021

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. 
இலங்கையும் பல்வேறு நாடுகளிலிருந்து தடுப்பூசிகளை பெற்றாலும் இன்னும் பற்றாக்குறையாகவே உள்ளது. 
இந்நிலையில் கொழும்பு, பொரளை பிரதேச வீடொன்றில் அஸ்ரா செனகா கொரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி, 
குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
இந்த தடுப்பூசி உள்நாட்டவர்களுக்கு ரூபா. 1000 - 25000 வரையிலும் வெளிநாட்டவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொரளை பிரதேச வீடொன்றில் தடுப்பூசி விற்பனை! விசாரணைகள் ஆரம்பம்! பொரளை பிரதேச வீடொன்றில் தடுப்பூசி விற்பனை! விசாரணைகள் ஆரம்பம்! Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளர் மரணம்!

May 29, 2021

ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து இரண்டு தடவைகள் தப்பியோடிய Covid நோயாளி மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய குறித்த நபரின் உடல் மீகொட பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 
குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து தப்பிய நிலையில் வைத்தியசாலைக்கு 
அருகில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார். மீண்டும் அதே தினம் மாலை 3 மணிக்கும் தப்பிச் சென்றதும் வைத்தியசாலையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.
இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளர் மரணம்! இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளர் மரணம்! Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

பல்கலைக்கழக விண்ணப்பங்கள்: வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை:

May 29, 2021

பயண கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் உள்ள காரணத்தினால் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்குரிய ஆவணங்களை வீடுகளுக்கு விநியோகிக்க குறித்த புத்தக கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விண்ணப்பங்கள்: வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை: பல்கலைக்கழக விண்ணப்பங்கள்: வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை: Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

தடுப்பூசிக்காக மக்கள் தம்மை பதிவு செய்ய வேண்டுமா?

May 29, 2021

கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 
அதில் தடுப்பூசியை பெறுவதற்காக பொதுமக்கள் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற செய்தியும் பரவுகிறது. 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் அவர்கள், 
தடுப்பூசிக்காக மக்கள் தம்மை முன்பதிவு செய்து கொள்ளும் எந்த ஒரு நடைமுறையையும் சுகாதார அமைச்சு பின்பற்றவில்லை என தெரிவித்தார். மக்கள் தமக்கு கிடைக்கும் வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளின் அடிப்படையில் செயல்பட வேண்டியதில்லை. சுகாதார அமைச்சு மற்றும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமையவே மக்கள் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசிக்காக மக்கள் தம்மை பதிவு செய்ய வேண்டுமா? தடுப்பூசிக்காக மக்கள் தம்மை பதிவு செய்ய வேண்டுமா? Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (கணிதம்)

May 29, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 
நீளம், தூரம், நிறை. 

 

எண் விளக்கங்கள் 

 

எண் கோலங்கள் 

 

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற சகல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

மாணவர்கள் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

பயிற்சிகளை அதே நேரத்தில் செய்து சரிபார்க்கவும் முடியும்.

 

இலகுவான விளக்க முறைகள். 

குறித்த பாடத்தை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Join our WhatsApp Groups:


Join our Telegram Channel:

Like our FB Page:




தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (கணிதம்) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (கணிதம்) Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

கிராம சேவையாளர் பதவிக்கான விண்ணப்பம் / Application for the post of Grama Niladhari - 2020 (2021)

May 28, 2021

கிராம உத்தியோகத்தர் பதவிக்குரிய போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாடளாவிய ரீதியில் கோரப்பட்டுள்ளன. 28/5/2021 அன்று வெளியான வர்த்தமானியில் இது தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 

பரீட்சைக்குரிய மொழிமூலம்:     தமிழ்/சிங்களம்/ஆங்கிலம். 

 

பரீட்சைக்குரிய பாடங்கள்:         
(1) மொழித் திறம                                             (2) பொது அறிவு, உளச்சார்பு. 

 

நேரம்:    ஒவ்வொரு பாடமும் 1 1/2 மணித்தியாலங்கள். 

 

பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள்: 40 (ஒவ்வொரு பாடத்திலும் 40 புள்ளிகள்) 

 

பரீட்சைக்குரிய உத்தேச காலம்:     2021 செப்டம்பர். 

 

வயது எல்லை:     21-35 

 

விண்ணப்ப முடிவு திகதி:     28-06-2021. 

தெரிவு செய்யப்படுபவர்களுக்கு 3 மாத பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பணவாக வழங்கப்படும். 

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இது தொடர்பான முழுமையான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிடுக. (சிங்கள மொழி மூல வர்த்தமானி மாத்திரமே தற்போதைய நிலையில் பதிவேற்றப்பட்டுள்ளது)

Latest Update (29/5/2021):

இன்றைய தினம் ஏனைய இரு மொழிகளிலும் (தமிழ், ஆங்கிலம்) வர்த்தமானிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. எனவே கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து மும்மொழிகளிலும் வர்த்தமானிகளைப் பார்வையிடுக.

28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

கிராம சேவையாளர் பதவிக்கான விண்ணப்பம் / Application for the post of Grama Niladhari - 2020 (2021) கிராம சேவையாளர் பதவிக்கான விண்ணப்பம் / Application for the post of Grama Niladhari - 2020 (2021) Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசிக்காக வழக்கு பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம்

May 28, 2021

தமது நாடுகளுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளை ஒப்பந்தத்தை மீறி மூன்றாம் நாடுகளுக்கு விநியோகித்து வருவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் பிரெஸல்ஸில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
மூன்றாம் நாடுகளுக்கு அந்த நிறுவனம் தடுப்பூசிகளை வழங்கி ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும், தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களும் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரபேல் ஜப்ராலி குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசிக்காக வழக்கு பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம் கொரோனா தடுப்பூசிக்காக வழக்கு பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம்  Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

முதன்முறையாக விலங்குகளுக்காக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நாடு

May 28, 2021

உலகம் பூராவும் கொரோனாவானது மனிதர்களுக்கிடையே தீவிரமாக பரவிய கொண்டிருக்கும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் பல முன்னணி நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. 
அந்த போட்டி முடிவடைந்து தற்போது பலவகையான கொரோனா தடுப்பு மருந்துகள் பாவனையில் உள்ள நிலையில் தற்போது விலங்குகளுக்கான கொரோனா தடுப்பு மருந்தையும் ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. 
உலகிலேயே விலங்குகளுக்கென உருவாக்கப்பட்ட முதல் கொரோனா தொற்றுத் தடுப்புமருந்து இதுவாகும். 
அந்த மருந்து மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டதோடு 
தற்போது விலங்குகளுக்கு அந்த மருந்தை செலுத்தும் பணியையும் ரஷ்யா தொடங்கியுள்ளது. 
நாய், பூனை, நரி உள்ளிட்ட விலங்குகளிடம் குறித்த மருந்து சோதனை செய்யப்பட்டபோது, நோய் எதிர்ப்புத்தன்மை உருவானதாகத் தெரிவிக்கப்பட்டது. 
ஒரு முறை இந்த மருந்தை போட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி 6 மாதத்திற்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 
உலகெங்கும் பல விலங்குகளிடம் கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டபோதும் அது நோய் காவியாக செயற்படுவதற்கு எந்த ஆதரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக விலங்குகளுக்காக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நாடு முதன்முறையாக விலங்குகளுக்காக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நாடு Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து: வேறு கடைக்கு அனுமதிப்பத்திரம்:

May 28, 2021

பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள காலகட்டத்தில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் பொருட்களை விற்பனை செய்ய இரு கடைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 
எனவே அவ்வாறான வியாபார நிலையங்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் அவர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படுவதோடு அந்த ஊரில் உள்ள வேறு கடைக்கு அந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். 
கொண்டுசென்று விற்றல், வீட்டுக்கு வீடு பொருள் விநியோகம், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இரு கடைகளைத் திறத்தல் என பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதற்கு வசதியாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை(Hotline 1977) பெறும் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து: வேறு கடைக்கு அனுமதிப்பத்திரம்: அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து: வேறு கடைக்கு அனுமதிப்பத்திரம்: Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? வெளியானது அரசாங்கத்தின் முடிவு!

May 28, 2021

தற்போது அமுலில் உள்ள பயண கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பான கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. 
 அந்தவகையில் எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 4 ஆகிய தினங்களில் பயண கட்டுப்பாடு தளர்த்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். 
மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் மற்றும் மருந்து வகைகள் என்பவற்றை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட நடமாடும் வியாபார நிலையங்களில் கொள்வனவு செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? வெளியானது அரசாங்கத்தின் முடிவு! பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? வெளியானது அரசாங்கத்தின் முடிவு! Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (தமிழ் மொழி)

May 28, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய தமிழ் மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 
சொற்களைத் தெரிவோம். 
விரிவான சொற்களுக்குரிய சுருக்க எழுத்துக்களை அறிவோம். 
அலுவலக ரீதியான கடிதம் ஒன்றில் கடிதத்தின் வடிவமைப்பு. 
உவமான உவமேயங்களைக் கற்றுக் கொள்வோம். 
சுவரொட்டி தயாரிப்போம். 
உறுப்பமைய எழுதுவோம். 
வாக்கியம் அமைத்தல். 
போன்ற விடயங்கள் பயிற்சிகளுடன் தரப்பட்டுள்ளன. 
மாணவர்கள் கற்றுக் கொள்வதோடு உடனுக்குடன் பயிற்சிகளை செய்து சரிபார்த்துக் கொள்ளவும் முடியும். 
குறித்த விடயங்களை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (தமிழ் மொழி) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (தமிழ் மொழி) Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5
Powered by Blogger.