கொரோனா தடுப்பூசிக்காக வழக்கு பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம்


தமது நாடுகளுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளை ஒப்பந்தத்தை மீறி மூன்றாம் நாடுகளுக்கு விநியோகித்து வருவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் பிரெஸல்ஸில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
மூன்றாம் நாடுகளுக்கு அந்த நிறுவனம் தடுப்பூசிகளை வழங்கி ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும், தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களும் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரபேல் ஜப்ராலி குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசிக்காக வழக்கு பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம் கொரோனா தடுப்பூசிக்காக வழக்கு பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம்  Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.