ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் அரசின் அறிவிப்பு


ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஊடகத்துறை அமைச்சும் தகவல் திணைக்களமும் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். 
இந்த தடுப்பூசி மாவட்ட மட்டத்தில் வழங்கப்படும். கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பத்திரிகையாளர்களுக்கான தடுப்பூசிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் ஏற்கனவே வழங்கப்பட்டதாவும் அவர் மேலும் தெரிவித்தார். 
இதேவேளை ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன, ஊடகவியலாளர்களுக்காக தனியான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தை நிறுவ பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் அரசின் அறிவிப்பு ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் அரசின் அறிவிப்பு  Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.