சிறந்த காரியாக தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒன்பது வயது சிறுமி


இங்கிலாந்தில் உள்ள பிரபலமான இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான "இஸ்லாம் சனல் TV" நடத்திய இந்த வருடத்திற்கான (2021) "அல் குர்ஆன் கிராஅத் போட்டி" நிகழ்ச்சித் தொடரில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 09 வயது மர்யம் ஜெஸீம் வெற்றிவாகை சூடப்பட்டார். 
குறித்த தொலைக்காட்சி இந்த போட்டியை 15 வருடங்களாக தொடராக நடாத்தி வரும் நிலையில் 
 "முதல் தடவையாக கலந்து கொண்ட மர்யம் ஜெஸீம் முதலிடத்தைப் பெற்று 2021 ஆம் ஆண்டின் ஐக்கிய இராஜ்ஜியத்தின் "அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக " மகுடம் சூட்டப்பட்டார். 
6-14 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே இந்த போட்டி நடத்தப்பட்டது. 
இச் சிறப்பு மகுடத்தை அதி குறைந்த வயதில் வென்ற, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட முதலாவது சிறுமி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறந்த காரியாக தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒன்பது வயது சிறுமி சிறந்த காரியாக தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒன்பது வயது சிறுமி Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.