கின்னஸ் சாதனையுடன் ஆரம்பமான IPL இறுதிப் போட்டி! அறிமுகமான முதல் சீசனிலேயே சம்பியன் பட்டத்தை வென்ற அணி!
இறுதிப் போட்டியானது கின்னஸ் உலக சாதனையுடனே ஆரம்பமானது. அதாவது போட்டிக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் சீருடையான ஜேர்சி மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இது 66 மீட்டர் நீளமும் 42 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.
இந்த ஜேர்சியில் 15வது ஐபிஎல் தொடர் என குறிக்கப்பட்டதுடன் விளையாடிய 10 அணிகளின் இலச்சினைகளும் அதில் பொறிக்கப்பட்டிருந்தன.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நிறைவு விழாவில் இடம்பெற்றிருந்தது.
இறுதிப்போட்டி நடைபெற்றது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திரமோடி மைதானத்திலாகும். 132,000 பேருக்கான இருக்கை வசதிகள் இதில் உள்ளன.
இம்முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது இந்த சீசனில்தான் அறிமுகமான அணி என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Irumbu Thirai News
on
May 30, 2022
Rating:















