மோடியை சந்தித்து 13000 கோடி நிவாரணம் கோறவுள்ளர் முதல்வர் பழனிச்சாமி

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட  ம்டெல்டா மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரங்களை புரட்டிப்போட்ட கஜா புயல் நிவாரணத்திற்காக  நிதி ஒதுக்கக்கோரி பிரதமரை முதல்வர் வலியுறுத்த உள்ளார்.

பிரதமர்  மோடியை இன்று நேரில் சந்திக்க உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணமாக 13,000 கோடி ரூபாய் ஒதுக்குமாறு வலியுறுத்த உள்ளார்.

தமிழக டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் காரணமாக விவசாயிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேத மதிப்பீடுகள் கணக்கிட்டு அதனை மத்திய அரசிடம் நிதி பெற்று தருவேன் என்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவிந்தார்.

நேற்று மாலை சென்னையூடாக டெல்லி சென்ற  பழனிசாமியை அங்குள்ள அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். அவ்விடத்திலிருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.

 முதல்வருடன் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியினை சந்தித்து இது பற்றி பேச உள்ளார் என தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளர்து. இச் சந்திப்பின் போது தலைமை செயலாளரும் உடன் இருப்பார்.

அப்போது கஜா புயலால்  பாதிக்கப்பட்டவைகள் குறித்து பிரதமரிடம் விளக்க உள்ள முதல்வர் எடப்பாடி, நிவாரண நிதி உதவியாக 13,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இன்று மாலை அவர் சென்னை திரும்ப உள்ளார்..
மோடியை சந்தித்து 13000 கோடி நிவாரணம் கோறவுள்ளர் முதல்வர் பழனிச்சாமி மோடியை சந்தித்து 13000 கோடி நிவாரணம் கோறவுள்ளர் முதல்வர் பழனிச்சாமி  Reviewed by Tamil One on November 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.