மஹிந்த ஆட்சியில் மத்திய வங்கி ஊழலும் பிறவும்-சிறு ஞாபகப்படுத்தல்!



◆Direct placement முறைமையில் பிணை முறி வழங்கலின் போது,
1-2012 இல் 2,420 கோடி
2-2013 இல் 3,230 கோடி
3-2014 இல் 1,960 கோடி
மொத்தமாக மூன்று வருடங்களில்
7,610 கோடி ரூபா நட்டம்.
◆2014 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டின் பிணை முறிகளை மத்திய வங்கி கொள்வனவு செய்து 2,000கோடிக்கு மேல் நட்டத்தை எதிர்கொண்டது.
◆அமெரிக்கா,பிரேஸிலில் இரு கட்டடங்களைக் கொள்வனவு செய்த போது 87.2 கோடி மோசடி.
◆கடனாக டொலர் கொள்வனவு-மீளச்செலுத்தலின் போது டொலர் பெறுமதி உயர்வால் பாரிய நட்டம்.
◆இது போக மத்திய வங்கியின் ஆலோசகர்களாக மூவர் நியமிக்கப்பட்டு
வருடாந்த சம்பளமாக 139.6 கோடி வழங்கப்பட்டு அதிலும் ஊழல் இடம்பெற்றுள்ளது.


இது போக சிறீலங்கன் எயார்லைன்ஸ்,
அவன்கார்ட், மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹெல்பிங் ஹம்மாந்தோட்டை, ஹெட்ஜிக் உடன்படிக்கை கொள்ளை, பொதுநலவாய விளையாட்டு விழா ஊழல், EPF/ETF இல் செயற்கையான வட்டி விகிதத்தில் பல கோடிகளை ஏப்பம் விட்டமை எனப்பல தொடர் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
அத்துடன் கோப் குழுவின் அறிக்கையில் 19 நிறுவனங்களில் 33,000கோடி ரூபா ஊழல் செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
19இல் ஒன்றே மத்திய வங்கி ஆகும்.
இன்று ரணில் கொள்ளையடித்த விடயத்தை மட்டுமே நாமும் மகிந்த அணியும் சிங்கள ஊடகங்களும் அதிகம் பேசுகிறோம். மிகுதியை அநேகர் மறந்துவிட்டனர் அல்லது நடித்து மழுப்பி விடுகின்றனர்.

இருந்த போதும் மகிந்தவின் ஆட்சியில் இடம்பெற்ற பாரிய ஊழல்களை கணக்கில் எடுக்காது சிறிய விடயங்களுக்காக மட்டும் கைது செய்யப்பட்டதையும் மகிந்தவின் ஆட்சியைப்போல் இந்த ஆட்சியிலும் மத்திய வங்கி ஊழலை மூடி மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் நாம் ஒரு போதும் ஏற்கவே முடியாது.

ஆனால் மகிந்த-மைத்திரி-ரணில் கால மோசடிகளை COPE, COPA இல் பிரதான பாத்திரம் வகிக்கும் ஜேவிபி மட்டுமே பேசும். அதற்கான தகுதியும் அவர்களுக்கே உள்ளது.

ஜெமில்.
மஹிந்த ஆட்சியில் மத்திய வங்கி ஊழலும் பிறவும்-சிறு ஞாபகப்படுத்தல்! மஹிந்த ஆட்சியில் மத்திய வங்கி ஊழலும் பிறவும்-சிறு ஞாபகப்படுத்தல்! Reviewed by Tamil One on November 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.