சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு 2நாள் ஒதுக்கப்பட்டுள்ளது - கேரளா அரசு

சபரிமலை அய்யப்பன் கோவிலுள்ள செல்ல பெண்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.. ஆனால் தற்போது கேரளா உயர் நீதி மன்றத்தின் அறிக்கை படி பெண்கள் வழிபடுவதற்காக  இரண்டு நாட்கள் மாத்திரம் ஒதுக்கத் தயார் என்று  தெரிவிந்துள்ளது.

 அய்யப்பனை தரிசனம் செய்ய கேரள அரசு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி 4 பெண்கள் வழக்குத் தொடர்ந்தனர்


இந்த வழக்கின் விசாரணையில் பதில் மனு தாக்கல் செய்துள்ள கேரள அரசு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி குறிப்பிட்ட வயதினரை மாத்திரமே அனுமதிக்க முடியும் என்றும் தொடர்ச்சியான் போராட்டங்கள் காரணமாகவே இதுவரை பெண்கள் தரிசனம் செய்ய இயலவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.


இதனடிப்படையில் பெண்கள் வழிபடுவதற்காக  2 நாட்கள் மாத்திரம் ஒதுக்கத் தயாராக இருப்பதாக கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது




சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு 2நாள் ஒதுக்கப்பட்டுள்ளது - கேரளா அரசு சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு 2நாள் ஒதுக்கப்பட்டுள்ளது - கேரளா அரசு Reviewed by Tamil One on November 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.