13 உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு தடை விதிப்பு: கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி:


கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் பணிப்புரைக்கு அமைய 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அதிகாரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார். 
அம்பாறை, ஏறாவூர் ஆகிய நகர சபைகளின் மற்றும் பொத்துவில், இறக்காமம், பதியத்தலாவ, மண்முனை, வாழைச்சேனை, வாகரை, ஏறாவூர்பற்று, 
சேருவில, தம்பலகாமம், திருகோணமலை பட்டிணமும் சூழலும், மொரவெவ ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்களுக்கே இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் சபை தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான விசேட வர்த்தமானி வெயிடப்படும் வரை சபை அமர்வுகளை நடத்துவதற்கும் மூலதன வேலைத்திட்டங்களை செய்யவோ அல்லது இலவச விநியோகங்களை மேற்கொள்ளவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு தடை விதிப்பு: கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி: 13 உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு தடை விதிப்பு: கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி: Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.