கடத்தப்பட்ட தேரர் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு: நால்வர் கைது:


நேற்று கொட்டதெனிய, நாவான மயானத்திலிருந்து எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலமானது, கடந்த 2ஆம் திகதி கடத்தப்பட்ட ஹங்வெல்ல, தும்மோதர, கொஸ்வத்த, கொடிகந்த ஆரன மடத்தில் இருந்த 65 வயதுடைய 
உடுவில தம்மசிரி தேரரின் சடலமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் குறித்த மண்டபத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் பெண் ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கடத்தப்பட்ட தேரர் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு: நால்வர் கைது: கடத்தப்பட்ட தேரர் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு: நால்வர் கைது: Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.