நாளை முதல் ரயில் பொதி சேவை


நாளை (07) முதல் மீண்டும் ரயில் பொதிசேவை ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 
நாளை பிரீமா லங்கா தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை ரயில் மூலம் கொண்டுசெல்லும் 
சேவையும் ஆரம்பமாகிறது. இதற்காக சீதுவ பிரீமா லங்கா (prima Lanka) நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் இது தொடர்பான வைபவம் ஒன்றும் இடம்பெறவுள்ளது. 
இதேவேளை ரயில் சேவைகள் நடத்தப்படும் பிரதேசங்களுக்கு மாத்திரம் பொதிகளை அனுப்பி வைக்கலாம். பழுதடையக்கூடிய பழ வகைகள், காய்கறிகள் போன்றவற்றை ரயில் நிலையங்களில் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் கஸூன் சாமர தெரிவித்தார்.
நாளை முதல் ரயில் பொதி சேவை நாளை முதல் ரயில் பொதி சேவை Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.