10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம்..


10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஹோமாகம போலீஸ் நிலையமே இவ்வாறு சட்டவிரோதமாக நீரை பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்திற்கு தண்ணீர் வழங்க கூடிய 
நான்கு இணைப்புக்கள் இருந்துள்ளன. அதில் மூன்று இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த துண்டிக்கப்பட்ட இணைப்புகள் மூலமாக சட்டவிரோதமாக நீர் இவ்வளவு காலமும் பெறப்பட்டுள்ளது. 
 இந்த சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சுமார் 15 லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நீர்வழங்கல் சபைக்கு கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்தே இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது இது தொடர்பான விசாரணைகளை அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.
10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம்.. 10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம்.. Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.