தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை:


கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்ட காத்தான்குடி நகரில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். 
இதற்குக் காரணம் முடக்க நிலையினை முறையாக மக்கள் பின்பற்றாமையேயாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 எனவே இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று இரவு முதல் மிகக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவையாவன,
  • அனுமதியின்றி வீதியில் நடமாடுபவர்கள், வீட்டுக்கு வெளியே வருகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்த போலீசாருக்கு இறுக்கமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 
  • மற்றும் அனுமதியின்றி வாகனங்களில் சென்றால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்படும். 
  • அனுமதியின்றி கடைகளை திறந்து வியாபாரம் செய்கின்றவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 
  • இன்று இரவிலிருந்து முழுமையான ராணுவ பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்படும். 
போன்ற கடுமையான நடவடிக்கைகள் அங்கு  அமுலாகின்றன. 
தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை: தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.