பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமா?


சுகாதார வழிமுறைகளுக்கமைவாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சுக்கிடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 
வைரஸ் தொற்று அபாயம் அதிகமுள்ள மேல் மாகாணம் தவிர ஏனைய மாகாணங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பிக்கலாம். 
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளவர்களை எக்காரணம் கொண்டும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டாம். 
அத்துடன் நோய் அறிகுறிகளுடைய மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள எந்தவொரு பிள்ளைகளையும் விளையாட்டுப் போட்டிகளுக்கு உட்படுத்தக்கூடாது. 
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் தேவைக்கேற்ப முழுமைப்படுத்தப்பட்டு முறையாக பாடசாலை விளையாட்டுப் போட்டி ஆரம்பிப்பதிலுள்ள முக்கியத்துவம்.
போன்ற விடயங்கள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டன.
பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமா? பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமா?  Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.