10 மாதங்களின் பின் திறக்கப்படும் விமான நிலையங்கள்: திகதியும் அறிவிப்பு:


10 மாதங்களின் பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் வணிக சேவைகளுக்காக திறக்கப்படவுள்ளது. 
அதேவேளை 
ஜனவரி 23 ஆம் திகதியளவில் விமான நிலையங்களில் வணிக விமான பயணங்கள் முறையாக முன்னெடுக்கப்படும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 
இன்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். 
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், நாட்டின் சுற்றுலா துறையில் நேரடியாக மற்றும் மறைமுகமாக சுமார் 60 இலட்சம் பேர் நன்மை அடைகின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக இவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என குறிப்பிட்டார்.
10 மாதங்களின் பின் திறக்கப்படும் விமான நிலையங்கள்: திகதியும் அறிவிப்பு: 10 மாதங்களின் பின் திறக்கப்படும் விமான நிலையங்கள்: திகதியும் அறிவிப்பு:  Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.