உரிமை கோரப்படாத கொரோனா உடல்கள்: போராட்டத்தில் ஈடுபட்ட ஹோமாகம மருத்துவர்கள்:


ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இதுவரை உரிமை கோரப்படாமல் வைக்கப்பட்டுள்ள கொரோனா உடல்கள் காரணமாக பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அங்கு பணியாற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் அமைதிப் போராட்டம் ஒன்றையும் நடத்தினர். 
 இதன்போது கருத்து வெளியிட்ட ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வருணா ஜயசூரிய தெரிவிக்கையில், 
இங்குள்ள உடல்களில் ஐந்து உடல்கள் முஸ்லிம்களுடையது. உடல்களை உரிமை கோர வராததாலும் தகனம் செய்வதற்கு சவப்பெட்டி இல்லாமையாலும் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. அவர்களுடைய எதிர்ப்பை இந்த முறையில் தகனம் செய்வதற்காக தெரிவிக்கின்றனர். பழுதடைந்த நிலையிலும் இரண்டு உடல்கள் உள்ளன. இந்த நிலை எமது சுகாதார ஊழியர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்று அவர் தெரிவித்தார்.
உரிமை கோரப்படாத கொரோனா உடல்கள்: போராட்டத்தில் ஈடுபட்ட ஹோமாகம மருத்துவர்கள்: உரிமை கோரப்படாத கொரோனா உடல்கள்: போராட்டத்தில் ஈடுபட்ட ஹோமாகம மருத்துவர்கள்: Reviewed by irumbuthirai on January 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.