அமைச்சர் தயாசிறிக்கு கொரோனா: பாராளுமன்றம் மூடப்படுமா?


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அந்த வகையில் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் இவராவார். கடந்த 4 நாட்களாக சுகவீனமுற்றிருந்த தயாசிறி ஜயசேகர 
PCR செய்து பார்த்தபொழுது நேற்றிரவு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 
அவர் தற்போது ஹிக்கடுவை, ஹோட்டல் ஒன்றில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இதேவேளை கடந்த சில நாட்களாக நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் தான் கலந்து கொள்ளவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தயாசிறிக்கு கொரோனா: பாராளுமன்றம் மூடப்படுமா? அமைச்சர் தயாசிறிக்கு கொரோனா: பாராளுமன்றம் மூடப்படுமா? Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.