மாவனல்லை புத்தர் சிலை விவகாரம்: கைது செய்யப்பட்டது யார் ?


கடந்த 28 ஆம் திகதி இரவு மாவனெல்லை இம்புல பிரதேசத்தில் புத்த சிலை ஒன்றிற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கேகாலை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பிரியந்த சமபத் குமார என்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 
இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர். இதற்கு முன்னர் வணக்கஸ்தலம ஒன்றில் 
உண்டியல் ஒன்றை உடைத்து திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புத்தர் சிலைக்கு அருகில் இருந்து 60 ரூபாவினை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதைப் போன்று இது அடிப்படைவாத அல்லது தீவிரவாத செயல் அல்ல என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மாவனல்லை புத்தர் சிலை விவகாரம்: கைது செய்யப்பட்டது யார் ? மாவனல்லை புத்தர் சிலை விவகாரம்: கைது செய்யப்பட்டது யார் ? Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.