தரம் 11 க்கு மாத்திரம் ஆரம்பமாகும் மேல் மாகாண பாடசாலைகள்...


மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் தரம் 11 ஆம் வகுப்புக்கான பாடசாலைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார். 
 எதிர்வரும் மார்ச் மாதத்தில் 
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நடைபெற இருப்பதனால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 
 இதேவேளை 2021 கல்வியாண்டுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.. 
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் தவிர்த்த, ஏனைய சகல பாடசாலைகளும் இவ்வாறு திறக்கப்படவுள்ளன. இந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு பாடசாலை நடத்துவது பற்றி விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
(அரசாங்க தகவல் திணைக்களம் )
தரம் 11 க்கு மாத்திரம் ஆரம்பமாகும் மேல் மாகாண பாடசாலைகள்... தரம் 11 க்கு மாத்திரம் ஆரம்பமாகும் மேல் மாகாண பாடசாலைகள்... Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.